Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1424 கி.பி. 2003


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின்
ஈத் அல்-பித்ர் வாழ்த்துச் செய்தி


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அங்கத்தவர்களுக்கும் தேசிய, சர்வதேச முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது இதயபூர்வ ஈத் அல்-பித்ர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் புளகாங்கிதம் அடைகின்றேன்.

புனித ரமழானில் நோன்பிருந்து, இரவு வணக்கங்களில் ஈடுபட்டு, இஃதிகாப், குர்ஆன் ஓதல், திக்ர், துஆ, தராவீஹ், ஸகாத், ஸதகா போன்ற உன்னத நற்கருமங்களைச் செய்து இறை நெருக்கத்தைப் பெற்ற அதே வேளை தவ்பஹ் (பாவ மன்னிப்புக்) கோரி, தம்மை பரிசுத்தப் படுத்திக் கொண்டவர்களாக இன்றைய தினம் ஈத் அல்-பித்ரை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இத்தகைய நற்கிரியைகள் ஏனைய 11 மாதங்களிலும் தொடர வேண்டும். ஒரு மாத காலம் பெற்ற புலணடக்கப் பயிற்சி எதிர்வரும் நாட்களிலும் பேணப்படல் வேண்டும்.

ஹிஜ்ரி 1424 ஈதுல் பித்ரை கொண்டாடும் இவ்வேளை முஸ்லிம் உம்மாவைப் பற்றி ஒரு கனம் சிந்திப்போம். வன்முறை, அடக்குமுறை, இன சுத்திகரிப்பு, பலவந்த வெளியேற்றம், வறுமை போன்றவற்றிற்கு ஆட்பட்டு துக்ககரமான வாழ்க்கை நடத்தும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் விடயத்தில் கரிசனை காட்டி எம்மால் முடியுமான உதவிகளையும் இப்பாதிக்கப்பட்டோருக்கு வழங்க முன் வருவோம். ‘முஸ்லிம்கள் விவகாரத்தில் கவனம் செலுத்தாதவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்ல’ எனும் நாயக வாக்கியத்தை மனதிற் கொள்வோம்.

நம் நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் சமாதானம் தலைத்தோங்கி, சகல மக்களும் சகோதர வாஞ்சையுடன் வாழ அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்.


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர்

2003.11.23

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page